வரலாற்று சாதனை படைத்த முல்லைத்தீவு யோகபுரம் மகா வித்தியாலயம்

வடமாகாணத்திலிருந்து அகில இலங்கை தமிழ் மொழித்தினப் போட்டியில் துணுக்காய் கல்வி வலயத்தின் முல்லைத்தீவு யோகபுரம் மகா வித்தியாலயத்திலிருந்து இலக்கண போட்டி பிரிவு IVல் பங்குபற்றி முதலிடம் பெற்று தேசிய மட்டத்திற்கு தெரிவாகியுள்ளது. மாணவச் செல்வங்களுக்கும் இவர்களை பயிற்றுவித்து ஊக்கமளித்த ஆசிரியர்களுக்கும் Vinothini Vino என்ற நபர் முகநூலில் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.